புதுச்சேரி, ஜூலை 4- புதுவையில் மேலும் 9 பகுதிகளை கட்டுப்பாட்டு மண்டல மாக மாவட்ட ஆட்சியர் அருண் அறி வித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கொரோனா பரவலை தடுக்க அர சும், மாவட்ட நிர்வாகமும் பல்வேறு நட வடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக கொரோனா பாதித்த வர்கள் வசித்த பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்படுகிறது. அதன்படி கதிர்காமம் விநாயகர் கோவில் வீதி, திலாசுபேட்டை வீமன் நகர் மாரியம்மன் கோவில் வீதி, தட்டாஞ்சாவடி சொக்கநாதன்பேட்டை மாரியம்மன் கோவில் வீதி, தர்மாபுரி திரவுபதி அம்மன் கோவில் வீதி, கரு வடிக்குப்பம் நாகம்மன் நகர் முரு கேசன் வீதி, லாஸ்பேட்டை சாந்தி நகர் சேரன்வீதி, அரியாங்குப்பம் முதல் குறுக்குத்தெரு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு ஒருபகுதி, அபிஷேகப் பாக்கம் புதுநகரின் ஒருபகுதி, மண வெளி முதல் குறுக்குத்தெரு ஒருபகுதி ஆகியவை கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்படுகிறது.
அந்த பகுதிகளில் பொதுப் போக்கு வரத்து மற்றும் பொதுமக்கள் நடமாட்டத் திற்கு தடை விதிக்கப்படுகிறது. அந்த பகுதிகள் ‘சீல்’ வைக்கப்பட்டு காவல் துறை கண்காணிப்பில் உள்ளது. மேலும் புதுவை மாநிலத்தில் இது வரை ஊரடங்கு உத்தரவை மீறியதாக 3,629 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. 16,667 வாகனங்கள் பறி முதல் செய்யப்பட்டுள்ளன. தேவை யின்றி சுற்றித் திரிந்ததாக 1,432 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.